24 66443c48aae46
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பாரிய திருட்டுகளில் ஈடுபட்ட தமிழ் சிறுவன்

Share

இலங்கையில் பாரிய திருட்டுகளில் ஈடுபட்ட தமிழ் சிறுவன்

கம்பளையில் பாரிய திருட்டுகளில் ஈடுபட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க வளையல்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உட்பட சுமார் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான திருடப்பட்ட பொருட்களுடன் கலஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை நில்லம்ப அலுவலக சந்தி பகுதியில் உள்ள வரிசை வீடொன்றில் சிறிய தந்தையுடன் இருந்த சிறுவனை பொலிஸார் தங்கள் பொறுப்பில் அழைத்துச் சென்றுள்ளனர்.

கலஹா நகரில் உள்ள வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்து 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடியதுடன், அதே ஊரில் உள்ள தொலைபேசி கடைக்குள் நுழைந்து ஐபோன்களும், அலுவலக சந்தியிலுள்ள வீட்டிற்குள் நுழைந்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான கைச்சிள் மற்றும் அதே பிரதேசததில் உள்ள வீட்டில் இருந்த உண்டியல் உட்பட மின்னணு உபகரணங்களும் சிறுவனால் திருடப்பட்டுள்ளன.

திருடப்பட்ட சைக்கிளை குறித்த சிறுவனின் மற்ற நண்பர் வயல்வெளியில் ஓட்டிச் சென்றபோது திருட்டுச் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சிறுவயது முதலே கடும் துன்புறுத்தல்களுக்கு மத்தியில் இருந்த இந்த சிறுவன் பொலிஸாரின் விசாரணைகளுக்கு முகம் கொடுக்காமல் மௌனமாக இருந்துள்ளார்.

இதையடுத்து, இதனையறிந்த குற்றப் பிரிவின் நிலைய அதிகாரி விசாரணைகளை நிறுத்தி, சிறுவனை அமைதிப்படுத்தி அவருடன் நட்பு கொண்டுள்ளார். பின்னர் அவரிடம் அன்பு காட்டி சாக்லேட், ஐஸ்கிரீம் கொடுத்து அனைத்து தகவல்களையும் பெற்றுள்ளார்.

சிறுவன் தனது தந்தையை சிறுவயதில் இருந்து பார்த்ததில்லை. தாய் மறுமணம் செய்து கொண்டதால், சித்தப்பாவின் கட்டளைக்கு உட்பட்டு, அன்றிலிருந்து கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார்.

தாய் ஒரு வருடத்திற்கு முன்னர் வீட்டு வேலைக்காக வெளிநாட்டு சென்றுள்ளதாகவும், அவர் அனுப்பும் பணம் சித்தப்பா மதுபானத்திற்காக செலவிடப்பட்டதாகவும், பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நிலம்ப தமிழ் கல்லூரியில் 9ஆம் ஆண்டு படிக்கும் இவர் இந்த நிலை காரணமாக பாடசாலைக்கு செல்வதும் குறைந்துள்ளது.

அன்பும், கருணையும் இழந்து தனக்கு பிடித்த சாப்பாடு போன்றவற்றை வாங்க பணம் இல்லாததால் இயல்பாகவே இவ்வாறு திருடியுள்ளார் என தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...