24 66440089b485f
இலங்கைசெய்திகள்

உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை

Share

உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை

நாட்டில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இடைத்தரகர்களின் மோசடியான நடவடிக்கைகள் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் எலுமிச்சை 50 ரூபாய் முதல் 100 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்படுவதாகவும், தமது உற்பத்திகளுக்கான உரிய விலை கிடைக்கவில்லை என எலுமிச்சை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் சந்தையில் ஒரு கிலோகிராம் எலுமிச்சை 2,200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, பேலியகொடை சந்தையில் ஒரு கிலோ இஞ்சி 3,200 ரூபாவாக நேற்றைய தினம் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...