24 66412ec5e312e
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டுத் தப்பியோடும் ஆபத்தான வர்த்தகர்கள்

Share

நாட்டை விட்டுத் தப்பியோடும் ஆபத்தான வர்த்தகர்கள்

இலங்கையின் முக்கியமான போதைப்பொருள் வர்த்தகர்கள் பலரும் அண்மைக்காலமாக நாட்டை விட்டும் தப்பியோடத் தொடங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

யுக்திய மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்படவிருந்த பலரும் இவ்வாறு தப்பி ஓடியுள்ளனர்.

மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தை இலக்காகக் கொண்டு பல வருடங்களாக இவர்கள் போதைப்பொருள் வியாபாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இவர்களின் பெயர் மற்றும் வசிப்பிடம் தொடர்பிலான பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த நபர்கள் கைது செய்யப்படவுள்ள விபரம் பொலிஸ் திணைக்களத்திற்கு உள்ளிருந்தே போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு வழங்கப்படுவதன் காரணமாக அவர்கள், தம்மைக் கைது செய்ய பொலிஸார் தேடிவர முன்னரே நாட்டை விட்டும் தப்பியோடத் தொடங்கியுள்ளனர்.

அத்துடன் இவர்களுள் அநேகமானோர் வெளிநாடுகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் துபாய் போன்ற பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக்கும்பல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....