24 66402b0482f12
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு தப்பியோடும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்

Share

நாட்டை விட்டு தப்பியோடும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்

நூற்றுக்கும் அதிகமான பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வியாபாரங்களிலிருந்து நீங்கி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த இவர்கள் விசேட அதிரடிப்படையினர் மீது பெரும் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேட அதிரடிப்படை (Special Task Force) மற்றும் காவல்துறை புலனாய்வுப் பிரிவு அவர்களை கைது செய்ய முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மேல் மாகாணம் (Western Province) மற்றும் தென் மாகாணத்தை இலக்காகக் கொண்டு பல வருடங்களாக இவர்கள் போதைப்பொருள் வியாபாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுள் அநேகமானோர் வெளிநாடுகளில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தை விட்டு விலகியே அவர்கள் இவ்வாறு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய தினங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் சுற்றிவளைப்புகள் காரணமாக இவர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தை விட்டு விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 6823d086c8e1c
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

தமிழரசுக்கட்சியை அழித்தவரே வெளியில் இருந்து அமைச்சர்களைப் பதவி விலகக் கோருவது கேலிக்கூத்து’ – எம்.பி. இளங்குமரன் ஆவேசம்!

தமிழரசுக்கட்சியை அழிப்பதற்கு மூலகாரணமாக இருந்தவரும், நாடாளுமன்றத்திற்கு வரமுடியாது விரட்டியடிக்கப்பட்ட ஒருவரும் வெளியில் இருந்து அரசாங்க அமைச்சர்களைப்...

MediaFile 2 5
இலங்கைபிராந்தியம்

மன்னாரில் தேசிய நீர் வழங்கல் சபையின் விசேட முகாம்: பெரிய கரிசல் கிராமத்தில் ஒரே நாளில் புதிய இணைப்புச் சேவை!

மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய...

images 2 9
செய்திகள்இலங்கை

நாளை மிரிஹானை பொதுக்கூட்டத்தால் போக்குவரத்து மாற்றம்: மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவுறுத்தல்!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை (நவம்பர் 21) நண்பகல் நடைபெறவுள்ள...

japan sri lanka flags
செய்திகள்இலங்கை

5000 ஜப்பானிய மொழிப் பயிற்சியாளர்கள்: இலங்கையில் புதிய வேலைத்திட்டங்களை உருவாக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டம்!

2026ஆம் ஆண்டிற்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்த 5000 இலங்கையர்களைக் கொண்ட ஒரு குழாத்தை...