இலங்கை
கொழும்பு தாமரை கோபுரத்தில் சாகச விளையாட்டு
![கொழும்பு தாமரை கோபுரத்தில் சாகச விளையாட்டு 1 24 66405747b9f63](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2024/05/24-66405747b9f63.jpg?lossy=2&strip=1&webp=1)
கொழும்பு தாமரை கோபுரத்தில் சாகச விளையாட்டு
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் வான் சாகச விளையாட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இன்று தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சாகச விளையாட்டு 35 சர்வதேச வீரர்களால் நிகழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வை பார்வையிடுமாறு தாமரை கோபுர நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி நேர அட்டவணை பின்வருமாறு:
மே 12 பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை.
மே 13 காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.
மே 14 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.