24 663c2d042007f
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Share

குழந்தைகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

நாட்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் குழந்தைகள் பீட்டா தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தலசீமியா நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஈ. எம் ரஞ்சனி எத்ரிசூரிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச தலசீமியா தினத்தை முன்னிட்டு நேற்று (08) கொழும்பு சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே விசேட வைத்தியர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தலசீமியா ஹீமோகுளோபின் உற்பத்தியில் குறைபாடுகளை ஏற்படுத்தும் மரபணு மாற்றத்தால் ஏற்படும் நோய் என்பதால், குழந்தைகளுக்கு அதிக அளவு இரத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தலசீமியா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான செலவு சுகாதார அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நோயால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது மிகப்பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமையை தடுப்பதற்கு நாட்டில் தலசீமியா பிரசவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது முக்கியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, தலசீமியா கேரியர் நிலையை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் தலசீமியா மேஜர் கொண்ட குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு சர்வதேச தலசீமியா தினத்தின் கருப்பொருள் “உயிர்களை மேம்படுத்துதல், முன்னேற்றத்தைத் தழுவுதல், தலசீமியா சிகிச்சையை நியாயமானதாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றுதல்” என்பதாகும்.

மேலும், திருமணத்திற்கு முன் அனைவருக்கும் தலசீமியா பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதிப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...