இலங்கைசெய்திகள்

யாழில் திடீரென வாகனங்களை மறித்து சோதனை

Share
24 663c6c2f02c07
Share

யாழில் திடீரென வாகனங்களை மறித்து சோதனை

நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக ‘யுக்திய’ சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (09.5.2024) காலை யாழ்ப்பாணம் (Jaffna) – சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.

காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் (Deshabandu Tennakoon) ஆலோசனைக்கு அமைவாக போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ‘யுக்திய’ சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், யாழ். சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பிரதேசத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஏ 9 மற்றும் ஏ 32 வீதிகளூடாக பயணித்த வாகனங்களை மறித்து சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...