இலங்கைசெய்திகள்

போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை

24 663c1a49940f7
Share

போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை

ஜனவரி 1, 2023 மற்றும் டிசம்பர் 25, 2023 க்கு இடையில் 1,769 போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மே மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட 1,769 போலி நாணயத்தாள்கள் 11 நீதிமன்ற வழக்குகளுக்காக இலங்கை மத்திய வங்கி நீதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.

இலங்கையில் ஒரு மில்லியன் நாணயத் தாள்களுக்கு சுமார் 1.4 போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இது ஒரு மில்லியன் நாணயத் தாள்களுக்கு 15 போலி நாணயத் தாள்கள் என்ற உலகளாவிய சராசரி வீதத்துடன் ஒப்பிடும் போது கணிசமான குறைவாகும்.

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 57 ஆவது பிரிவின் கீழ், நீதித்துறை நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், போலி நாணயத் தாள்களைப் பின்பற்றுவது தொடர்பான தீர்க்கமான ஆதாரமாக மத்திய வங்கி 97 சான்றிதழ்களை வழங்கியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, புழக்கத்தில் உள்ள பணத்தின் தரத்தை பேணுவதற்காக போலி நாணயத்தாள்களை கண்டறிவது பற்றிய அறிவை மேம்படுத்தும் வகையில், இலங்கை மத்திய வங்கி இதுவரை பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு சுமார் 25 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...