இலங்கைசெய்திகள்

பல பில்லியன் நாணயத்தை அழித்த இலங்கை மத்திய வங்கி

Share
24 6635cdf8c7f58
Share

பல பில்லியன் நாணயத்தை அழித்த இலங்கை மத்திய வங்கி

கடந்தாண்டு புழக்கத்துக்கு பொருத்தமற்ற சுமார் 80 பில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத் தாள்களை இலங்கை மத்திய வங்கி எரித்து அழித்துள்ளது.

கடந்த வருடம், மத்திய வங்கி நிர்ணயித்த நியமங்களுக்கு பொருத்தமற்ற 79.82 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டன.

மத்திய வங்கி கடந்த வருடம் 250 மில்லியன் புதிய நாணயத்தாள்களை பெற்றுள்ளது.

அதற்கமைய, 469.28 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத் தாள்களும் 571.95 மில்லியன் ரூபா பெறுமதியான நாணயங்களும் புழக்கத்திற்காக வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் நாட்டில் நாணய சுழற்சி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் 2.1 சதவீதமாக இருந்த பணப்புழக்கத்தின் வளர்ச்சி 2023ஆம் ஆண்டுக்குள் 15.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதற்கமைய, கடந்த ஆண்டு நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தின் அளவு 1,186.5 பில்லியன் ரூபாயாகும்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...