24 6635f3d816468
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் திட்டத்தால் இழப்பை சந்தித்துள்ள இலங்கை அரசு

Share

கோட்டாபயவின் திட்டத்தால் இழப்பை சந்தித்துள்ள இலங்கை அரசு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால்(Gotabaya Rajapaksa) அறிமுகப்படுத்தப்பட்ட இரசாயன உரத் தடை காரணமாக இருநூற்று நாற்பது மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் பொருளாதாரப் பிரிவு நடத்திய ஆய்வின்படி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபர கற்கைகள் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவிக்கையில்,

“இரசாயன உரங்களை தடைசெய்யும் தன்னிச்சையான தீர்மானத்தினால் கடந்த வருடம் நெல் மற்றும் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது.

இதனால் அந்த ஆண்டில் ஒவ்வொரு விவசாயிக்கும் சாதாரணமாக ஒரு இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உயர் பருவத்தில் நெல் உற்பத்தி 11 இலட்சத்து முப்பதாயிரத்து நூற்று அறுபத்து நான்கு மெட்ரிக் தொன் (1,130,164) டன் ஒப்பிடுகையில் 36% குறைந்துள்ளது.

மேலும், நெல் உற்பத்தி 30% குறைந்துள்ளது. இரசாயன உரங்கள் மீதான தடையால் கடந்த ஆண்டு தேயிலை உற்பத்தி 47,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமாக குறைந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கணக்கீட்டின்படி, தேயிலை உற்பத்தி குறைந்ததால் ஏற்பட்ட நிதி இழப்பு ஆறாயிரத்து எண்பத்து நான்கு கோடி ரூபாய் என்பது தெரியவந்தது.

இறப்பர் ஏற்றுமதி 1.8%, தேங்காய் ஏற்றுமதி 5.9%, மசாலா ஏற்றுமதி 18.9% மற்றும் மரக்கறி ஏற்றுமதி 6.6% குறைந்துள்ளது” என்றார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...