24 6633c350aa025
இலங்கைசெய்திகள்

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

Share

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட சுற்றுலா தொடருந்து சேவை நேற்று (01) முதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மலையக தொடருந்து பாதை பதுளை வரை நீடிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் புதிய விசேட சுற்றுலா தெடருந்து சேவையை அறிமுகப்படுத்த தொடருந்து திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விசேட சுற்றுலா தொடருந்தின் பெயர் ‘கலிப்சோ’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஆனால் தொடருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைக்குழு மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய சிற்றுண்டிச்சாலை முதல் நாளில் மட்டுமே செயல்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனையடுத்து இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த தொடருந்து சேவை மீண்டும் அனைத்து வசதிகளுடனும் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த தொடருந்து பதுளையில் இருந்து புறப்பட்டு, தெமோதரவில் 10 நிமிடங்களும், எல்ல 9 ஆர்ச் பாலத்தில் 10 நிமிடங்களும் நின்று சுற்றுலாப் பயணிகளுக்கு அப்பகுதியை காணும் வாய்ப்பை வழங்குகிறது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...