24 6633c350aa025
இலங்கைசெய்திகள்

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

Share

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட சுற்றுலா தொடருந்து சேவை நேற்று (01) முதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மலையக தொடருந்து பாதை பதுளை வரை நீடிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் புதிய விசேட சுற்றுலா தெடருந்து சேவையை அறிமுகப்படுத்த தொடருந்து திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விசேட சுற்றுலா தொடருந்தின் பெயர் ‘கலிப்சோ’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஆனால் தொடருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைக்குழு மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய சிற்றுண்டிச்சாலை முதல் நாளில் மட்டுமே செயல்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனையடுத்து இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த தொடருந்து சேவை மீண்டும் அனைத்து வசதிகளுடனும் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த தொடருந்து பதுளையில் இருந்து புறப்பட்டு, தெமோதரவில் 10 நிமிடங்களும், எல்ல 9 ஆர்ச் பாலத்தில் 10 நிமிடங்களும் நின்று சுற்றுலாப் பயணிகளுக்கு அப்பகுதியை காணும் வாய்ப்பை வழங்குகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...