24 663450d115a97 1
இலங்கைசினிமா

பிரபல நடிகையால் சுந்தர் சி-க்கும் குஷ்பூவிற்கும் சண்டை.. உண்மையை உடைத்த இயக்குனர்

Share

பிரபல நடிகையால் சுந்தர் சி-க்கும் குஷ்பூவிற்கும் சண்டை.. உண்மையை உடைத்த இயக்குனர்

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. அரண்மனை, அன்பே சிவம், கலகலப்பு, அருணாச்சலம், உள்ளத்தை அள்ளித்தா என நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்திருக்கும் படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் இன்று அரண்மனை 4 திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில் கலந்துகொண்ட சுந்தர் சி பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டார். அதில் ஒன்றாக பிரபல நடிகையால் தனக்கும் தனது மனைவிக்கும் இடையே சண்டை வந்தது என கூறியுள்ளார்.

இதில் சுந்தர் சி-யின் மனைவி நடிகை குஷ்பூ தனது பிறக்கப்போகும் மகளுக்காக ‘மாளவிகா’ எனும் பெயர் சூட்ட வேண்டும் என ஆசையோடு இருந்துள்ளார். இதை தனது கணவரிடமும் கூறியுள்ளார். இந்த சமயத்தில் படத்தின் பாடல் அமைக்க இசையமைப்பாளர் தேவாவின் ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார் சுந்தர் சி.

கதாநாயகியின் பெயரில் இந்த பாடலை அமைத்துள்ளார் தேவா. ஆனால், சரியான பெயர் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் மாளவிகா என்ற பெயரை இசையமைப்பாளர் தேவாவிடம் கூறியுள்ளார். அவரும் அட இது நல்லா இருக்கே என கூறி, மாளவிகா பெயரிலேயே பாடலை அமைத்துள்ளார்.

அதன்பின், அப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான, நடிகையின் பெயரும் மாளவிகாவாக மாறிவிட்டது. இப்படத்திற்கு பின் மளவிகாவும் தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார்.

தனது மகளுக்கு வைக்க வேண்டும் என குஷ்பூ தேர்ந்தெடுத்து வைத்திருந்த பெயரை, கதாநாயகிக்கு வைத்ததால் நடிகை குஷ்பூவிற்கும் சுந்தர் சி-க்கும் சண்டை வந்ததாம். இதை நகைச்சுவையாக அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார் இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

12 14
இலங்கைசெய்திகள்

மின்கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சி: சஜித்தின் வேண்டுகோள்

மின் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியைக் கைவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். இது...

13 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான்

இலங்கையில், ஜப்பான் நிறுவனங்கள், ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கும் என்று தாம்...

14 13
இலங்கைசெய்திகள்

இலங்கையை சோகமயமாக்கிய கோர விபத்து – பிள்ளையை காப்பாற்றிய தாய் தொடர்பான தகவல்

கொத்மலை, கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த பெண் 5 பிள்ளைகளின் தாய் என...