24 663458afd2181 1
இலங்கைசெய்திகள்

நடிகை தமிதா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Share

நடிகை தமிதா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சிங்கள திரைப்பட நடிகை தமிதா அபேரட்ன(Damitha aberathna), இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அநீதியான முறையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தமிதா மற்றும் அவரது கணவர் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தமிதா மற்றும் அவரது கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக தாம் அரசியலில் பிரவேசித்த காரணத்தினால் தமக்கு எதிராக இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...