24 663307c0b642f
இலங்கைசெய்திகள்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் அதிகரிப்பு

Share

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் அதிகரிப்பு

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் வரை மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் அந்நிய செலாவணி சந்தைகளில் இருந்து நிகர அடிப்படையில் மத்திய வங்கி அந்நிய செலாவணியை கணிசமான அளவில் கொள்முதல் செய்தமையே நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்புக்கு முக்கியமாக காரணமாகும்.

இந்த உத்தியோகபூர்வ கையிருப்புகளில் சீனாவின் மத்திய வங்கியின் அந்நிய செலாவணி வசதியும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 1,139 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 9.8 வீத அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழில்துறைப் பொருட்களின் ஏற்றுமதியின் அதிகரிப்பு முக்கியமாக ஏற்றுமதி வருவாய் அதிகரிப்புக்கு பங்களித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுற்றுலா வருமானம் அதிகரித்துள்ளதுடன் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் மார்ச் மாதத்தில் 572 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 9.1 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இதேவேளை, யூரோ, ஸ்டேர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென், இந்திய ரூபாய் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றுக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...