24 65fbb007e476d
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலை தோற்கடிக்க பசில் வகுத்துள்ள சூழ்ச்சி

Share

ரணிலை தோற்கடிக்க பசில் வகுத்துள்ள சூழ்ச்சி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைப்பற்றி வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளை தோற்கடிக்க இன்றைய மே தினத்தை தீர்க்கமான நாளாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுன தலைவர்கள் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சியை மிஞ்சும் வகையில் மே தினப் பிரச்சாரத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவும், மே தினக் கூட்டங்களில் அதிகபட்சமான கட்சி உறுப்பினர்களை பங்கேற்கச் செய்யவும் இரண்டு அடிப்படை கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்காக உள்ளுராட்சி தலைவர்களுக்கு பெருமளவு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாமரை மொட்டு அலங்காரத்தை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை மிஞ்சும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு தேவையான சகல பணமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சியினரை மே பேரணியில் பங்கேற்க வைப்பதற்கு தேவையான பணமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதற்கு பசில் ராஜபக்சவும் நாமல் ராஜபக்சவும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...