asw
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து அறிவிப்பு

Share

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் பயனாளிகளை கண்டறிய விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான சுற்றுநிருபம் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெற்றுக் கொள்வது உறுதி செய்யப்பட்டால், அவ்வாறான தரப்பினருக்கான கொடுப்பனவு இடைநிறுத்தப்படும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

ஆகவே அஸ்வெசும கொடுப்பனவிற்கு பொருத்தமான சரியான தகவல்களை மாத்திரம் பதிவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 69405094615b9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லைத்தீவில் போதைப்பொருள் கடத்தல்: திருமணமான தம்பதியர் உட்பட ஐவர், ஐஸ் மற்றும் வாள்களுடன் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திருமணமான தம்பதியர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப்...

95570777 trainafp
இலங்கைசெய்திகள்

மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்: விடுமுறை மற்றும் பரீட்சை காரணமாக பாடசாலைகள் மூடப்படும் திகதிகள் அறிவிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த பல பாடசாலைகள் இன்று (டிசம்பர் 16) மீண்டும் கல்வி...

95570777 trainafp
செய்திகள்

கிழக்கு ரயில் தண்டவாளத்தில் சேவை மீண்டும் ஆரம்பம்: 18 நாட்களுக்குப் பிறகு சீன விரிகுடாவிலிருந்து சீதுவா நோக்கிப் புறப்பட்டது முதல் சரக்கு ரயில்!

வெள்ளத்தால் சேதமடைந்த கிழக்கு ரயில் தண்டவாளங்களில் பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடைந்த 18 நாட்களுக்குப் பிறகு, இன்று...

919387 00900779
இலங்கைசெய்திகள்

நெல் இருப்பை அரிசியாக்கி சந்தையில் விநியோகிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல் இருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்கும் யோசனைக்கு அமைச்சரவை...