24 66306a0f2d765
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம்

Share

வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம்

வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardena) தெரிவித்துள்ளார்.

வரியில்லா வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து தமது கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(Ranil Wickremesinghe) உத்தியோகபூர்வமாக முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தசாப்த காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே பல அமைச்சர்கள் தொடர்ந்தும் 12 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களையே பயன்படுத்தி வருவதாக சபாநாயகர் முன்னதாக குறிப்பிட்டிருந்ததாக ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...