24 66303e261d060
இலங்கைசெய்திகள்

67 நாடுகளுக்கு இலவச வீசா வழங்க இலங்கை தீர்மானம்

Share

67 நாடுகளுக்கு இலவச வீசா வழங்க இலங்கை தீர்மானம்

67 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச வீசா வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஏழு நாடுகளுக்கு இலவச வீசா வழங்கப்படுகின்றது. இந்த ஏப்ரல் மாதத்தின் 25ம் திகதி வரையில் 121500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யூடியூப் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் போதிலும் சில சுற்றுலாப் பயணிகள் துன்புறுத்தல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒடிசி தொடருந்து கண்டியிலிருந்து எல்ல வரையிலான பயணத்திற்கு 3000 ரூபா அறவீடு செய்யப்பட்ட போதிலும் சில தொடருந்து திணைக்கள அதிகாரிகள் 8000 ரூபா வரையில் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அறவீடு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

45 இடங்கள் சுற்றுலா பிராந்தியங்களாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பின்னவல யானைகள் சரணாலயம், சீகிரியா போன்ற சுற்றுலா பகுதிகள் வேறும் அமைச்சுக்களின் கீழ் இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றை சுற்றலா அமைச்சின் கீழ் கண்காணிப்பதற்கு முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...