24 66303a9421c39
இலங்கைசெய்திகள்

மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள்

Share

மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள்

நாளை (1ஆம் திகதி) மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் 1500 பேருந்துகளை அரசியல் கட்சிகள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று (29 ஆம் திகதி) மாலை வரை இருநூறு பேருந்துகளுக்கு மாத்திரமே பணம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெரும்பாலும் பேருந்துகளை கோரியுள்ளன.

இலங்கை போக்குவரத்துச் சபையின் 107 டிப்போக்களின் கீழ் நான்காயிரத்து எழுநூறு பேருந்துகள் இயங்கி வருகின்றன.இதில் ஆயிரத்து ஐநூறு பேருந்துகளுக்கான கோரிக்கை கிடைத்துள்ளது.

இந்த பேருந்துகளை வழங்கும்போது, ​​அரசு சுற்றறிக்கையின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேருந்துகளுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும். முழுத் தொகையும் செலுத்தாமல் ஒரு பேருந்து கூட தரப்படாது என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...