24 662f5875c8e00
இலங்கைசெய்திகள்

பாரிய அளவில் அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

Share

பாரிய அளவில் அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

2024 ஏப்ரல் முதல் 25 நாட்களில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், கடந்த 25 நாட்களுக்குள் 121,595 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2024ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 757,379ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் முதல் 25 நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் 18 வீத இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் எண்ணிக்கை 21,324 ஆகும்.

இது தவிர, ரஷ்யாவிலிருந்து 12,807 சுற்றுலாப்பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 11,626 சுற்றுலாப்பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 8,565 சுற்றுலாப்பயணிகளும் இந்நாட்டுக்கு வந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...