24 662f5875c8e00
இலங்கைசெய்திகள்

பாரிய அளவில் அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

Share

பாரிய அளவில் அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

2024 ஏப்ரல் முதல் 25 நாட்களில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், கடந்த 25 நாட்களுக்குள் 121,595 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2024ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 757,379ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் முதல் 25 நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் 18 வீத இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் எண்ணிக்கை 21,324 ஆகும்.

இது தவிர, ரஷ்யாவிலிருந்து 12,807 சுற்றுலாப்பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 11,626 சுற்றுலாப்பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 8,565 சுற்றுலாப்பயணிகளும் இந்நாட்டுக்கு வந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...