24 662ae06a2306d
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபய -மகிந்த -பசில் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

Share

கோட்டாபய -மகிந்த -பசில் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

தொழிலதிபர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் மற்றும் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அஜித் நிவார் கப்ரால் ஆகியோரிடம் இருந்து 50 மில்லியன் ரூபா நஷ்ட ஈடாக கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டதற்காக மேற்கூறப்பட்ட இவர்கள் அனைவரும் வட்டியுடன் கூடிய 50 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு பணத்தை இரண்டு வாரங்களுக்குள் தனக்கு செலுத்தாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை மட்டும் பாவிக்க கூடிய சத்திரசிகிச்சை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர் கலிங்க சில்வா, சட்டத்தரணி பிரமோத் பொல்பிட்டிய ஊடாக இந்த கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார்.

2019 மற்றும் 2022 க்கு இடையில் பொருளாதாரம் தவறாகக் கையாளப்பட்டதன் காரணமாக, தனது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும், இதன் விளைவாக 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியான பணத்தை இழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், தினசரி மின்வெட்டு என்பன வர்த்தக நடவடிக்கைகளில் நட்டம் ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாகும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் மற்றும் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அஜித் நிவார் கப்ரால் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...