24 662adc1c3d2d6
இலங்கைசெய்திகள்

விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் அணி பயிற்சி நிறைவு

Share

விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் அணி பயிற்சி நிறைவு

பாதாள உலகக் கும்பல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான விசேட அதிரடிப்படையின் விசேட பயிற்சி பெற்ற முதலாவது பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி பயிற்சிகளை நிறைவு செய்துள்ளது.

குறித்த அணியினரின் பயிற்சி நிறைவு வைபவம் , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தலைமையில் களுத்துறை கட்டுகுருந்தவில் உள்ள விசேட அதிரடிப்படை பயிற்சி பாடசாலையில் நேற்று (25) நடைபெற்றுள்ளது.

இதன்போது பயிற்சியை நிறைவு செய்த 96 சிறப்பு மோட்டார் சைக்கிள் சாரதிகள், 48 மோட்டார் சைக்கிள்களுடன் இங்கு கலைந்து சென்றனர்.

கலைந்து சென்ற அனைத்து மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், அவர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பல் புள்ளிகளைக் கண்டறிந்து அவர்களின் நடவடிக்கைகளை ஒடுக்குவதே இந்தப் படையணியின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...