24 6629ac491adc8
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியல்வாதியின் மோசமான செயல்

Share

தென்னிலங்கை அரசியல்வாதியின் மோசமான செயல்

கொரியாவில் போட்டி பரீட்சையின்றி வேலை வாங்கி தருவதாகக் கூறி 500 இளைஞர்களிடம் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவை தென்னிலங்கையின் பலமான அரசியல்வாதி ஒருவர் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் இதுவரை எவரும் அனுப்பப்படவில்லை எனவும் இளைஞர்கள் குழு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கத்தின் ஊடாக போட்டி பரீட்சையின்றி கொரியாவில் வேலை வாங்கி தருவதாக குறித்த இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தென்னிலங்கை அந்த அரசியல்வாதி, 500 இளைஞர்களிடம் இருந்து தலா 40,000 ரூபா பணம் பெற்றுக்கொண்டதாகவும், தலா 1500 ரூபா கட்டணமாக பெற்று பயிற்சி வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாகொல பிரதேசத்தில் ஆறு நாட்களாக இடம்பெற்ற பயிற்சியில் இளைஞர்கள் குழுவொன்று கலந்துகொண்டதாகவும் இந்த இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விவசாயத்துறையில் பரீட்சையின்றி உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அரசியல்வாதி கூறியதாகவும் ஒரு மாவட்டத்திதிற்கு ஐம்பது வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பயிற்சிக்கு சென்ற ஒவ்வொரு இளைஞனும் இந்த அரசியல்வாதியிடம் பொலிஸ் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை கையளித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஒரு இளைஞன் கூட கொரியாவிற்கு வேலைக்கு அனுப்பப்படாததால் செலவு செய்த பணத்தை மீண்டும் பெறுவதிலும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த இளைஞர் குழு கவலை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...