24 66286ab499aa1
இலங்கைசெய்திகள்

கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்த இலங்கை அரசாங்கம்: காரணம் தொடர்பில் தகவல்

Share

கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்த இலங்கை அரசாங்கம்: காரணம் தொடர்பில் தகவல்

கனடாவின் பிராம்ப்டன் நகரில் இலங்கையின் தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்கும் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்ததாக கூறப்படுகிறது.

தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கான இறுதி வடிவமைப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிராம்ப்டன் நகர சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்டதன் பின்னரே பிரம்டனில் நினைவுச்சின்னம் கட்டப்பட்டது.

இந்த நிலையில், இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுச்சின்னம் பற்றிய செய்தி இலங்கை அதிகாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்தே வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் “தீவிர கவலையை” தெரிவிக்க, கொழும்பில் உள்ள ஒட்டாவாவின் தூதரை வரவழைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது, முன்மொழியப்பட்ட நினைவுச்சின்னம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் தனது “வலுவான கவலையை” வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில், மே 18 அன்று தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...