24 66275b8661cd8
இலங்கைசெய்திகள்

மதுபான கடை உரிமங்களை நண்பர்களுக்காக பெற்றுக்கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Share

மதுபான கடை உரிமங்களை நண்பர்களுக்காக பெற்றுக்கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆகிய கட்சிகளின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதுபான கடை உரிமங்களை தங்கள் நண்பர்களுக்காக பெற்றுக்கொடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் பெரும் தரகு பணத்துக்காக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி (Kandy) போன்ற சில மாவட்டங்களின் மதத் தலைவர்கள் மதுபானக் கடைகளை அமைக்கும் திட்டம் குறித்தும், உரிமம் பெற உதவியவர்கள் குறித்தும் விசாரித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டதையடுத்து, அவர் இது தொடர்பில் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், அரசியல்வாதிகள் சிலர், இத்தகைய மதுபான கடைகளை நேரடியாகவோ அல்லது தங்கள் பிரதிநிதிகள் மூலமாகவோ வைத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், கட்சித் தலைமையின் அனுமதியின்றி, தமது தொகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்திடம் இருந்து நிதி ஒதுக்கீட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்ப உள்ளதால், இன்றைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுவில் வாத விவாதங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...