24 66265a64cc5f8
இலங்கைசெய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுப்போம்! சுமந்திரன்

Share

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுப்போம்! சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் ஏற்படும் சாதக – பாதகங்கள் தொடர்பில் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு சரியான முடிவை எடுப்போம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (Sumanthiran) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியினுடைய மத்திய குழுவில் கூடித் தீர்மானம் எடுப்போம். நாளை (23.04.2024) செவ்வாய்க்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடவுள்ளது.

அதன்போது, பொது வேட்பாளர் தொடர்பில் ஆரம்பகட்ட பேச்சு நடைபெறும். பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் ஏற்படும் சாதக – பாதகங்கள் தொடர்பில் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு சரியான முடிவை எடுப்போம்.

தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிப்போம்” என்றார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...