24 66265a64cc5f8
இலங்கைசெய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுப்போம்! சுமந்திரன்

Share

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுப்போம்! சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் ஏற்படும் சாதக – பாதகங்கள் தொடர்பில் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு சரியான முடிவை எடுப்போம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (Sumanthiran) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியினுடைய மத்திய குழுவில் கூடித் தீர்மானம் எடுப்போம். நாளை (23.04.2024) செவ்வாய்க்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடவுள்ளது.

அதன்போது, பொது வேட்பாளர் தொடர்பில் ஆரம்பகட்ட பேச்சு நடைபெறும். பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் ஏற்படும் சாதக – பாதகங்கள் தொடர்பில் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு சரியான முடிவை எடுப்போம்.

தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிப்போம்” என்றார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...