24 662606e176ab8
இலங்கைசெய்திகள்

வருவாய் இலக்கை எட்டத் தவறிய இலங்கை: ஆய்வில் தகவல்

Share

வருவாய் இலக்கை எட்டத் தவறிய இலங்கை: ஆய்வில் தகவல்

2024ஆம் ஆண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது வருவாய் மீதான வரவு செலவுத் திட்ட இலக்கை விட குறைவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

இந்த ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை (Budget – 2024) குறித்து வெரிடே (Verité) ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“1991ஆம் ஆண்டிலிருந்து வரவு செலவுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்குக்கான வருவாயை இலங்கை எட்டவில்லை.

அண்மையிலும், வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான நாடாளுமன்றக் குழுவானது வரி வருவாய் 2023இல் வரவு செலவுத் திட்ட இலக்கை விட 13 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்தது.

2024இல், அரசாங்கம் 4,164 பில்லியன் ரூபாய் வருவாயை எதிர்பார்க்கிறது. இது 2023ஆம் ஆண்டிற்கான அதன் திருத்தப்பட்ட கணிப்புகளிலிருந்து 42 சதவீத அதிகரிப்பு ஆகும்.

இருப்பினும், வரவு செலவு அறிக்கையின் நிலை 14 சதவீத பற்றாக்குறையுடன் 3,570 பில்லியன் ரூபாயாக மட்டுமே உள்ளது. உலகிலேயே அதிக வட்டி – செலவு – வருவாய் விகிதத்தை இலங்கை கொண்டுள்ளது.

மேலும், இந்த விகிதத்தை குறைப்பது, பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியமானதாகும்.

இதன்படி, 2024ஆம் ஆண்டின் பாதீடு, இந்த விகிதத்தை 64 சதவீதமாக குறைக்க எதிர்பார்க்கிறது.

எவ்வாறாயினும், இந்த விகிதம் கடந்த சில ஆண்டுகளில் இருந்ததைப் போலவே 70சதவீதத்தினை தாண்டும்.

எனவே, பொருளாதார வல்லுநர்கள் கடன் நிலைத்தன்மையின் முக்கியமான குறிகாட்டியாக கருதும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிய பொருளாதார மீட்சித் திட்டத்தில், இலங்கை வீழ்ச்சியடையும்” என சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...