24 6623049f25656
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மக்களின் காவலனாக வாழ்ந்த அரசியல்வாதி – குவிந்த மக்கள் வெள்ளம்

Share

இலங்கையில் மக்களின் காவலனாக வாழ்ந்த அரசியல்வாதி – குவிந்த மக்கள் வெள்ளம்

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும அவர்களின் இறுதி பயணம் இலட்ச கணக்கான மக்களின் பங்குபற்றலுடன் நேற்று நடைபெற்றது.

இலங்கையின் சமகால வரலாற்றில் பெருந்தொகை மக்களின் பங்கேற்புடன் அரசியல்வாதி ஒருவருக்கு நடைபெற்ற இறுதி நிகழ்வாக இது கருதப்படுகிறது.

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் அரச மரியாதையுடன் நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் இரவு மத்துகம யடதோலவத்தையில் உள்ள இல்லத்திற்கு மக்களின் கண்ணீருக்கு மத்தியில் பூதவுடல் கொண்டுவரப்பட்டது.

அரசியல் தலைவரின் இந்த திடீர் மரணம் அப்பகுதி மக்களால் இன்னும் தாங்க முடியாத அதிர்ச்சியாக உள்ளதென குறிப்பிட்டுள்ளனர்.

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலின் இறுதிக்கிரியைகள் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் சடலத்துடன் அடக்கம் செய்யும் இடம் வரை சென்றுள்ளனர். இறுதி அஞ்சலி நிகழ்வின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட உயர்மட்ட அரசியல்வாதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இறுதி நிகழ்வில் கட்சி பேதங்கள் இன்றி பலரும் கலந்து கொண்டனர். மூவின மக்களும் பெருந்தொகையான அஞ்சலி செலுத்தினர்.

பாலித்த தேவரப்பெரும வாழும் காலத்தில் மக்களுக்காக வாழ்ந்த அரசியல்வாதியாக போற்றப்பட்டார். அவர் சமூக செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ஐக்கிய தேசிய கட்சியில் நீண்டகாலமாக அரசியல்வாதியாக இருந்த பாலித்தவுக்கு ஏனைய அரசியல்வாதிகள் போன்று பெருந்தொகை சொத்துக்கள் எதுவும் இல்லை.

எனினும் விலைமதிப்பற்ற சொத்தான மக்களை அவர் பெற்றுள்ளார். அதனை நேற்றைய தினம் பங்கேற்ற மக்கள் வெள்ளம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

22 வருடங்களுக்கும் மேலான மக்கள் நட்புறவான அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும, மக்கள் மனதில் உண்மையான அரச சேவையின் பெறுமதியின் பல மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றுள்ளதாக என அங்கு வந்த பலர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 6860cb5917db7
சினிமாசெய்திகள்

சமந்தாவுடன் கீர்த்தி சுரேஷ்.. நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்றால்...

25 685fae44c22dc
சினிமாசெய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல்.. Worldwide பாக்ஸ் ஆபிஸ் விவரம்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 5
சினிமாசெய்திகள்

DNA திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமனவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

ஆஸ்கார் விருது குழுவில் கமல்.. பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர் பற்றி போட்ட பதிவு வைரல்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் தேர்வாகி இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது....