24 661ced3e91ae3 1
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கு அனுமதி : நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு

Share

வாகன இறக்குமதிக்கு அனுமதி : நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு

தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மேலும், தற்போது மத்திய வங்கிக்கு சொந்தமான வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

கடந்த காலங்களில் வெளிநாட்டு கையிருப்பு பூஜ்ஜியமாக காணப்பட்டது. தற்போது வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில் நாம் இறக்குமதி தடைகளை கட்டம் கட்டமாக நீக்கினோம்.

அதேபோல் தற்போது வாகன இறக்குமதிக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் உரிய முறைமையின் கீழ் நாம் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளோம்.

சுற்றுலாத் துறைக்கு தேவையான 750 வேன்கள் மற்றும் 250 பேருந்துகள் இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம். மிகவும் நுணுக்கமாக தேடிப்பார்த்து ஆராய்ந்த பின்னரே நாம் முடிவுகளை எடுக்கிறோம்.

சுற்றுலாத்துறை வளர்ச்சியடைகிறது. ரூபாயின் பெறுமதி அதிகரிக்கிறது. இதனால், எதிர்காலத்தில் அத்தியாவசியமான வாகனங்கள் எவை, தவிர்க்க முடியாத தேவையுடைய வாகனங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் அதற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய இடம் கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...