24 661ca80e85ed2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த் தாக்கம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Share

இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த் தாக்கம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருப்பதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டில் (2024) பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 13 ஆம் திகதிவரை இலங்கையில், மொத்தம் 21,028 வழக்குகள் பதிவாகியுள்ள அதே சமயம், அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

அந்தவகையில், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் கொழும்பில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 4,527 ஆக காணப்படுகின்றது.

இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த் தாக்கம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Dengue Cases Hike In 2024 Top 21 000

மேலும் மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்க இனங்காணப்பட்டுள்ள வேளையிலே 7,547 வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதேபோல் மாகாண ரீதியாக ஏப்ரல் மாதத்தில் முதல் 13 நாட்களுக்குள் அதிகபட்சமாக 989 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கணிசமான மழை பெய்து வருவதால், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்கவும் சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...