24 661ca80e85ed2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த் தாக்கம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Share

இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த் தாக்கம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருப்பதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டில் (2024) பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 13 ஆம் திகதிவரை இலங்கையில், மொத்தம் 21,028 வழக்குகள் பதிவாகியுள்ள அதே சமயம், அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

அந்தவகையில், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் கொழும்பில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 4,527 ஆக காணப்படுகின்றது.

இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த் தாக்கம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Dengue Cases Hike In 2024 Top 21 000

மேலும் மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்க இனங்காணப்பட்டுள்ள வேளையிலே 7,547 வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதேபோல் மாகாண ரீதியாக ஏப்ரல் மாதத்தில் முதல் 13 நாட்களுக்குள் அதிகபட்சமாக 989 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கணிசமான மழை பெய்து வருவதால், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்கவும் சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...