24 6614a9b8607e5
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத பிரமிட் வர்த்தகத்தின் ஊடாக ஏமாற்றப்பட்டுள்ள பலர்

Share

சட்டவிரோத பிரமிட் வர்த்தகத்தின் ஊடாக ஏமாற்றப்பட்டுள்ள பலர்

இலங்கையில் பாரியளவில் ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேர் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

ஒன்லைன் நிறுவனத்தின் ஊடாக நாட்டு மக்களிடம் பல கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் செயலாளர் ஆகியோரது வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நிறுவனத்தின் 55 வங்கிக் கணக்குகள் ஊடாக பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பணிப்பாளரான 25 வயதான பொலனறுவையைச் சேர்ந்த எரந்த தில்ஷான் சமரஜீவ என்பவரும், நிறுவனத்தின் செயலாளரான மாத்தளையைச் சேர்ந்த 23 வயதான ஹன்சிகா செவ்வந்தி என்ற யுவதியும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத பிரமிட் வர்த்தகத்தின் ஊடாக நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இவ்வாறான இணைய வழி மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...