இலங்கைசெய்திகள்

இலங்கையுடன் ஈடுபாட்டைப் பேண விருப்பம் தெரிவித்துள்ள அமெரிக்கா

Share
24 66112a8108738
Share

இலங்கையுடன் ஈடுபாட்டைப் பேண விருப்பம் தெரிவித்துள்ள அமெரிக்கா

வெள்ளை மாளிகையின் (White House) தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை ஒத்துழைப்புடன் தொடர்வதற்காக இலங்கையுடன் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பேணுவதில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வெள்ளை மாளிகை அறிக்கையின்படி, இந்த வார தொடக்கத்தில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடனான (Sagala Ratnayaka) தொலைபேசி உரையாடலின் போது ஜேக் சல்லிவன்(Jake Sullivan) இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அமெரிக்க ஆதரவு உட்பட இருதரப்பு ஈடுபாடுகள் குறித்து அவர்கள் உரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி, மற்றும் ஆளுகை கூறுகளை நிறைவு செய்வதற்கான இலங்கையின் தற்போதைய முயற்சிகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் சல்லிவனும் ரத்நாயக்கவும் கலந்துரையாடியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...