24 660d12a8b0ee4
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய மகிந்த

Share

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய மகிந்த

2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வழங்கியதன் மூலம் வெற்றி பெற்றதாக முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாநாடு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, விடுதலைப் புலிகளின் அமைப்பிற்கு பை நிறைய பணம் வழங்கியதன் மூலமாகவே யுத்தம் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தது திட்டமிட்ட சதி எனவும் அதன் பின்னர் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறான பல சதிகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அதிபரும் அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அந்த நடவடிக்கைகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...