24 660bc4054f2fe
இலங்கைசெய்திகள்

ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் பலன் மக்களுக்கு

Share

ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் பலன் மக்களுக்கு

கடந்த மாதத்தில் பணவீக்கம் 0.9% இனால் குறைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்கத் தேவையான பின்னணி உருவாகி வருகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தொடர்ந்து 6 காலாண்டுகளாக எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இருந்த நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வர நாங்கள் உழைத்தோம்.

2023 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும்(Ranil Wickremesinghe) அரசாங்கமும் இணைந்து சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி வசதிகளை வழங்கும் நிறுவனங்களுடன் கைகோர்த்து செயற்பட முடியுமான நிதி ஒழுக்கத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை நகர்த்தியதன் காரணமாகவே இந்த நிலையை அடைய முடிந்தது.

அதன்போது மக்களுக்கு சிரமங்கள் இருந்தாலும், தற்போது அந்த சிரமங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் பணவீக்கம் 0.9% இனால் குறைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்கத் தேவையான பின்னணி உருவாகி வருகிறது. இன்றைய நிலவரப்படி, விலைகள் நிலையாக உள்ளன.

பொருளாதாரம் தொடர்பாக, பல்வேறு நபர்கள் சில விடயங்களை குறிப்பிட்டு, பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் அவைகள் நியாயமானவைகள் அல்ல என்பது நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய தலைமைத்துவத்தைப் பாராட்ட வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துகிறது.

பொருளாதார நெருக்கடியை மிகவும் திறமையாக சமாளித்தார். எனவே, அவரது தலைமை தொடர்ந்தும் நாட்டுக்குத் தேவை.

நாடு இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பார்க்கும்போது, நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அது தவறான எண்ணம் என்பதைக் கூற வேண்டும்.

இப்போது நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதால் சிலர் இப்படி நம்பலாம். ஆனால் அப்படி ஒரு நிலை இதுவரை இல்லை.

தற்போதைய ஸ்திரத்தன்மை மிகச் சிறந்த முகாமைத்துவம், நேரடி முடிவெடுத்தல் மற்றும் சர்வதேச நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் அடையப்பட்டுள்ளது. ஆனால் அது யாராலும் செய்யக் கூடிய காரியம் அல்ல.

தற்போதைய திட்டத்தைத் தொடர்ந்தால், 2024ஆம் ஆண்டில் 2%-க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்ற வலுவான நம்பிக்கை உள்ளது.

மேலும், பணமாற்று விகிதம் வலுவாக இருந்தும், பணவீக்கம் 70 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்தாலும், விலை குறைப்பின் பலன் கிடைக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கறுப்புச் சந்தை விலையைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தாததால் இது நடந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். இதன் அடிப்படையில் அடுத்த வாரம் முதல் வாரந்தோறும் மொத்த விற்பனை விலையை பொதுமக்களுக்கு அறிவிக்க வர்த்தக அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

அதன் பிறகு சில்லறை விலைகள் குறித்து மக்கள் புரிந்து கொள்ள முடியும். மேலும், கடன் மறுசீரமைப்பு திட்டம் இன்று பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. IMF உடனான இரண்டாவது மறுஆய்வு இரண்டு வாரங்களுக்கு முன்பு முடிந்தது.

தற்போது பணிக்குழாம் மட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இது மூன்றாவது தவணையைப் பெறுவதற்கு பெரிதும் ஆதரவளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...