24 660bc4054f2fe
இலங்கைசெய்திகள்

ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் பலன் மக்களுக்கு

Share

ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் பலன் மக்களுக்கு

கடந்த மாதத்தில் பணவீக்கம் 0.9% இனால் குறைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்கத் தேவையான பின்னணி உருவாகி வருகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தொடர்ந்து 6 காலாண்டுகளாக எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இருந்த நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வர நாங்கள் உழைத்தோம்.

2023 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும்(Ranil Wickremesinghe) அரசாங்கமும் இணைந்து சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி வசதிகளை வழங்கும் நிறுவனங்களுடன் கைகோர்த்து செயற்பட முடியுமான நிதி ஒழுக்கத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை நகர்த்தியதன் காரணமாகவே இந்த நிலையை அடைய முடிந்தது.

அதன்போது மக்களுக்கு சிரமங்கள் இருந்தாலும், தற்போது அந்த சிரமங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் பணவீக்கம் 0.9% இனால் குறைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்கத் தேவையான பின்னணி உருவாகி வருகிறது. இன்றைய நிலவரப்படி, விலைகள் நிலையாக உள்ளன.

பொருளாதாரம் தொடர்பாக, பல்வேறு நபர்கள் சில விடயங்களை குறிப்பிட்டு, பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் அவைகள் நியாயமானவைகள் அல்ல என்பது நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய தலைமைத்துவத்தைப் பாராட்ட வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துகிறது.

பொருளாதார நெருக்கடியை மிகவும் திறமையாக சமாளித்தார். எனவே, அவரது தலைமை தொடர்ந்தும் நாட்டுக்குத் தேவை.

நாடு இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பார்க்கும்போது, நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அது தவறான எண்ணம் என்பதைக் கூற வேண்டும்.

இப்போது நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதால் சிலர் இப்படி நம்பலாம். ஆனால் அப்படி ஒரு நிலை இதுவரை இல்லை.

தற்போதைய ஸ்திரத்தன்மை மிகச் சிறந்த முகாமைத்துவம், நேரடி முடிவெடுத்தல் மற்றும் சர்வதேச நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் அடையப்பட்டுள்ளது. ஆனால் அது யாராலும் செய்யக் கூடிய காரியம் அல்ல.

தற்போதைய திட்டத்தைத் தொடர்ந்தால், 2024ஆம் ஆண்டில் 2%-க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்ற வலுவான நம்பிக்கை உள்ளது.

மேலும், பணமாற்று விகிதம் வலுவாக இருந்தும், பணவீக்கம் 70 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்தாலும், விலை குறைப்பின் பலன் கிடைக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கறுப்புச் சந்தை விலையைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தாததால் இது நடந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். இதன் அடிப்படையில் அடுத்த வாரம் முதல் வாரந்தோறும் மொத்த விற்பனை விலையை பொதுமக்களுக்கு அறிவிக்க வர்த்தக அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

அதன் பிறகு சில்லறை விலைகள் குறித்து மக்கள் புரிந்து கொள்ள முடியும். மேலும், கடன் மறுசீரமைப்பு திட்டம் இன்று பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. IMF உடனான இரண்டாவது மறுஆய்வு இரண்டு வாரங்களுக்கு முன்பு முடிந்தது.

தற்போது பணிக்குழாம் மட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இது மூன்றாவது தவணையைப் பெறுவதற்கு பெரிதும் ஆதரவளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...