24 660b3d28229ea
இலங்கைசெய்திகள்

மைத்திரியிடம் தகவல் சொன்ன மர்ம நபரைத் தேடும் குற்றப்புலனாய்வுப் பிரிவு

Share

மைத்திரியிடம் தகவல் சொன்ன மர்ம நபரைத் தேடும் குற்றப்புலனாய்வுப் பிரிவு

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யாரென்ற தகவலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறிய அந்த மர்ம நபரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இப்போது தேடத் தொடங்கியுள்ளனர்.

வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே இந்தத் தகவலை அவர் கூறினார் என்று மைத்திரி, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கூறியிருந்தார்.

இதனையடுத்து இப்போது அந்த நிகழ்வு இடம்பெற்ற இடத்தின் சி.சி.ரி.வி. காணொளிகளை அவர்கள் சோதித்துள்ளனர்.

இதேவேளை நல்லாட்சி அரசு சீனாவுடன் நெருங்கிச் செயற்பட்டது. அதன் காரணமாக, கோபமடைந்த நாடே இந்தத் தாக்குதலை நடத்தியது என்று அந்த நபர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் சொன்னதாக அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கவுள்ளனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பின்னர் சட்டமா அதிபரின் ஊடாக அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

Share
தொடர்புடையது
licence 1200px 2023 10 18
செய்திகள்இலங்கை

ஓட்டுநர் உரிமக் கட்டணத் திருத்தம் குறித்து இறுதி முடிவு இல்லை

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க அவர்கள், சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில்...

image 9f55943f1b 1
செய்திகள்இலங்கை

“மயானத்திலிருந்து மக்கள் சேவையா..!”: சஜித் பிரேமதாசவின் அறிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், “மயானத்தில் இருந்து கொண்டு மக்கள் சேவை செய்ய முடியாது....

image f4517ddf89 1
செய்திகள்இலங்கை

‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமையில் இருந்தபோது மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர்...

sachin tendulkar virat kohli sportstiger 1694859677789 original
விளையாட்டுசெய்திகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி – உலக சாதனை!

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, சர்வதேச ஒருநாள் (ODI) மற்றும் ரி20...