24 660b9df31a0bc
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில் இலங்கையர்

Share

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில் இலங்கையர்

அமெரிக்க பால்டிமோர் (Baltimore ) பால விபத்தில் சிக்கிய கப்பலில் உள்ள ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் இருப்பதாக பணியாளர்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கப்பல் குறித்த இடத்திலேயே உள்ள நிலையில் அதன் 21 பணியாளர்களும் கப்பலிலேயே இருக்கிறார்கள் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அவர்களுள் இருபது பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது கப்பலை பராமரிப்பதிலும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை மற்றும் அமெரிக்க கடலோர புலனாய்வாளர்களுடன் ஒத்துழைப்பதிலும் குறித்த இலங்கையர் மும்முரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பால்டிமோர் பாலப் பகுதியில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களுக்கான தற்காலிக, மாற்று வழியை அமெரிக்க கடலோர பொலிஸார் திறந்துள்ளனர்.

கடந்த வாரம் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆறு தொழிலாளர்கள் இந்த விபத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...