24 660782b61b655
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 30 வருடங்களாக பெரும் மோசடியில் சிக்கிய பெண்

Share

இலங்கையில் 30 வருடங்களாக பெரும் மோசடியில் சிக்கிய பெண்

அஹுங்கல்ல பிரதேசத்தில் சுமார் 30 வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குடு நோனி என்ற அனோமா சாந்திக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நேற்றைய தினம் (29) சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதன்போது காலி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மீன்பிடிக் கப்பல்களுக்கும் தடை விதித்துள்ளனர்.

ஏறக்குறைய 30 வருடங்களாக அஹுங்கல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் போதைப்பொருள் விற்பனை செய்து சம்பாதித்த பணத்தில் இந்த கப்பல்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், அவர் தனது உறவினர்கள் பெயரில் படகுகளை வாங்கியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நேற்று காலை காலி மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று மீன்பிடி படகுகளை கண்காணித்துள்ளார்.

இதேவேளை, அஹுங்கல்ல பிரதேசத்தில் சந்தேகநபருக்கு சொந்தமான 03 வீடுகள், 05 கடைகள் மற்றும் 05 காணிகளும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபருக்கு சொந்தமான லொறி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு பெக்ஹோ, ஒரு வான் மற்றும் இரண்டு முச்சக்கரவண்டிகள் என்பனவற்றையும் பொலிஸ் காவலில் எடுத்துச்சென்றுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர் 52 இலட்சம் ரூபாவை தனியார் நிறுவனமொன்றின் ஊடாக தயாரித்து வந்த மீன்பிடிக் கப்பலையும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கையகப்படுத்தியுள்ளனர்.

அதன்படி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட குடு நோனிக்கு சொந்தமான சொத்துக்களின் மொத்த பெறுமதி 11 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சொத்து குவிப்பு தொடர்பில் சந்தேகநபரான பெண் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட ஆறு பேர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...