24 660618ccb84e9
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் சிக்கல்

Share

வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் சிக்கல்

மின்சார கார்களின் பாவனையை ஊக்குவிக்க வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளன. நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி பிரச்சினை தான் இதற்கு காரணம். எரிபொருள் விலையும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பக்கம் திரும்புவது முக்கியம்.அதன்படி, மக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு மின்சார கார்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட வேண்டும்.

பொது போக்குவரத்து சேவைகளுக்கு மின்சார வாகனங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

2010 ஆம் ஆண்டு மின்சக்தி அமைச்சராக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துவதற்கு தாம் உழைத்ததை நினைவுகூர்ந்த ரணவக்க, அதே நேரத்தில் கூரைகளில் பொருத்தப்பட்ட சூரிய சக்தி அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

தற்போது அந்த முறையின் மூலம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சுமார் 700 மெகாவாட்ஸ் ஆகும். அடுத்த கட்டத்தில், சூரிய சக்தியைப் பயன்படுத்தி கார் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்.

சூரிய சக்தியின் பயன்பாட்டை தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு விரிவுபடுத்துவது உடனடித் தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...