24 660618ccb84e9
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் சிக்கல்

Share

வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் சிக்கல்

மின்சார கார்களின் பாவனையை ஊக்குவிக்க வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளன. நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி பிரச்சினை தான் இதற்கு காரணம். எரிபொருள் விலையும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பக்கம் திரும்புவது முக்கியம்.அதன்படி, மக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு மின்சார கார்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட வேண்டும்.

பொது போக்குவரத்து சேவைகளுக்கு மின்சார வாகனங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

2010 ஆம் ஆண்டு மின்சக்தி அமைச்சராக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துவதற்கு தாம் உழைத்ததை நினைவுகூர்ந்த ரணவக்க, அதே நேரத்தில் கூரைகளில் பொருத்தப்பட்ட சூரிய சக்தி அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

தற்போது அந்த முறையின் மூலம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சுமார் 700 மெகாவாட்ஸ் ஆகும். அடுத்த கட்டத்தில், சூரிய சக்தியைப் பயன்படுத்தி கார் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்.

சூரிய சக்தியின் பயன்பாட்டை தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு விரிவுபடுத்துவது உடனடித் தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...