24 66038fa01656a
இலங்கைசெய்திகள்

மைத்திரியின் வாக்குமூலம் தொடர்பில் நீதிமன்றம் அறிவித்தல்

Share

மைத்திரியின் வாக்குமூலம் தொடர்பில் நீதிமன்றம் அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் நீண்ட வாக்குமூலமொன்றை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்துவதாக மைத்திரி கூறியிருந்தார்.

இந்த வாக்கு மூலம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றிற்கு அழைத்து விசாரணை நடத்துமாறு கோர உள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்கு மூலம் குறித்த அறிக்கையை குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...