24 66038fa01656a
இலங்கைசெய்திகள்

மைத்திரியின் வாக்குமூலம் தொடர்பில் நீதிமன்றம் அறிவித்தல்

Share

மைத்திரியின் வாக்குமூலம் தொடர்பில் நீதிமன்றம் அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் நீண்ட வாக்குமூலமொன்றை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்துவதாக மைத்திரி கூறியிருந்தார்.

இந்த வாக்கு மூலம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றிற்கு அழைத்து விசாரணை நடத்துமாறு கோர உள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்கு மூலம் குறித்த அறிக்கையை குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...