24 660268411585b
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகளால் அதிகரித்துள்ள டொலர்

Share

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகளால் அதிகரித்துள்ள டொலர்

ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாட்டின் வர்த்தகச் சேவைகள் மற்றும் சுற்றுலாத்துறையின் வருமானம் கணிசமான அளவில் மீண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் இரண்டாவது நாணயக் கொள்கை மீளாய்வை வழங்குவதற்காக இன்று காலை (மார்ச் 26) கூட்டப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பின் போது, இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் எஸ். ஜெகஜீவன் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, ஜனவரி முதல் பெப்ரவரி வரையில் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக தொழிலாளர்களின் பணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இந்த மாதங்களில் சுற்றுலா வருவாய் 687 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, தொழிலாளர்களின் பணம் மற்றும் சுற்றுலா வருவாய் ஆகிய இரண்டும் 2022 ஐ விட கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.

மேலும், தொழிலாளர்களின் பணம் 2022 இல் 3.8 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2023 இல் 6 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

அத்தோடு, சுற்றுலா வருவாய் 2022 இல் 1.1 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2023 இல் 2.1 பில்லியன் டொலராக உயர்ந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...