24 65fe24b547b7b
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வேகமாக பரவும் தொற்றுநோய்

Share

இலங்கையில் வேகமாக பரவும் தொற்றுநோய்

“டினியா” எனப்படும் தோல் நிலை படிப்படியாக தொற்றுநோய் வடிவத்தில் உருவாகி வருவதாக தோல் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த தொற்றுநோய் வயது வித்தியாசமின்றி அனைத்து மக்களிடமும் பரவுவதாகவும், பெரும்பாலும் வியர்வை உள்ள இடங்களிலும், தலையைச் சுற்றியும் ஏற்படும் தன்மை இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் விசேட வைத்தியர் ஜனக அகரவிட்ட, விசேட வைத்தியர் இந்திக கரவிட்ட உள்ளிட்ட வைத்தியர்கள் பலரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன், மக்களுக்கு மேலும் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

இந்த நோய் தொற்று நிலை சொறி போல் தோன்றுவதாகவும், அரிப்பு முதன்மை அறிகுறியாக இருப்பதாகவும் வைத்தியக்குழு கூறியுள்ளது.

பொது கழிப்பறைகளை பயன்படுத்தும் போது தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த “டினியா” வகை தொற்று நோய் தற்போது வேறுபட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள ஒருவருக்கு இதுபோன்ற நோய் கண்டறியப்பட்டால், துணிகளை தனி தனியாக வெந்நீரைப் பயன்படுத்தி துவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பூஞ்சை வெப்பநிலையால் அழிக்கப்படும் என்றும், நாட்டில் இந்நோய்க்கு ஏற்ற 10 வகைக்கும் குறைவான மருந்துகளே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நோய் தொற்றுக்கு வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் மருந்து பயன்படுத்த கூடாது எனவும் வைத்தியக்குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...