24 65fe24b547b7b
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வேகமாக பரவும் தொற்றுநோய்

Share

இலங்கையில் வேகமாக பரவும் தொற்றுநோய்

“டினியா” எனப்படும் தோல் நிலை படிப்படியாக தொற்றுநோய் வடிவத்தில் உருவாகி வருவதாக தோல் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த தொற்றுநோய் வயது வித்தியாசமின்றி அனைத்து மக்களிடமும் பரவுவதாகவும், பெரும்பாலும் வியர்வை உள்ள இடங்களிலும், தலையைச் சுற்றியும் ஏற்படும் தன்மை இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் விசேட வைத்தியர் ஜனக அகரவிட்ட, விசேட வைத்தியர் இந்திக கரவிட்ட உள்ளிட்ட வைத்தியர்கள் பலரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன், மக்களுக்கு மேலும் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

இந்த நோய் தொற்று நிலை சொறி போல் தோன்றுவதாகவும், அரிப்பு முதன்மை அறிகுறியாக இருப்பதாகவும் வைத்தியக்குழு கூறியுள்ளது.

பொது கழிப்பறைகளை பயன்படுத்தும் போது தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த “டினியா” வகை தொற்று நோய் தற்போது வேறுபட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள ஒருவருக்கு இதுபோன்ற நோய் கண்டறியப்பட்டால், துணிகளை தனி தனியாக வெந்நீரைப் பயன்படுத்தி துவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பூஞ்சை வெப்பநிலையால் அழிக்கப்படும் என்றும், நாட்டில் இந்நோய்க்கு ஏற்ற 10 வகைக்கும் குறைவான மருந்துகளே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நோய் தொற்றுக்கு வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் மருந்து பயன்படுத்த கூடாது எனவும் வைத்தியக்குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...