24 65fe41ca980ee
இலங்கைசெய்திகள்

உயிரிழந்தவரின் சடலத்தினால் ஏற்பட்ட குழப்பம்

Share

உயிரிழந்தவரின் சடலத்தினால் ஏற்பட்ட குழப்பம்

பாணந்துறை பகுதியில் உயிரிழந்த தொழிலதிபர் ஒருவரின் சடலத்தினை அவரது இரண்டு மனைவிகளும் உரிமைக்கோரியதனால் மலர்சாலையில் வைத்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை வலான பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் மாரடைப்பு காரணமாக பாணந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த வர்த்தகருக்கு இரண்டு மனைவிகள் இருந்ததாகவும், அவர் இறக்கும் போது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரின் முதல் மனைவி சட்டத்தரணி என்றும், இரண்டாவது மனைவி பிரதேச செயலக உத்தியோகத்தர் எனவும், இருவருக்கும் பிள்ளைகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கமைய, பாணந்துறை மரண விசாரணை அதிகாரி துமிந்த அதிகாரம் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது சட்டத்தரணி மனைவி இறந்த கணவரின் உடலை தனது வீட்டில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும்,இறுதி அஞ்சலியை தடையின்றி நடத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.இதற்கு இரண்டாவது மனைவி,உறவினர்கள்,நண்பர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமான நிலைக்கு வராமையினால், பொலிஸாரின் தலையீட்டில் மலர்சாலையில் சடலம் வைக்கப்பட்டு பின்னர் புதைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், இறந்தவரின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்படும் வரை எவ்வித மோதலுமின்றி இரு தரப்பும் செயற்பட இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...