இலங்கைசெய்திகள்

சம்பளம் அதிகரிக்கப்படவில்லை! மத்திய வங்கி ஆளுநர்

Share
24 65fcd8bc43caf
Share

சம்பளம் அதிகரிக்கப்படவில்லை! மத்திய வங்கி ஆளுநர்

தமது சம்பளத் தொகை அதிகரிக்கப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சம்பள அதிகரிப்பானது பிரதி ஆணையாளர்கள் வரையில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் மத்திய வங்கியில் மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்பின் மூலம், தன்னை விடவும் குறைந்த தரத்திலான சில வங்கி அதிகாரிகள் தம்மை விடவும் கூடுதல் சம்பளம் ஈட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

வங்கியாளர் என்ற வகையில் தமக்கு உள்ள அனுபவத்தையும் அறிவாற்றலையும் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதவியை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே தமது சம்பளம் தொடர்பில் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...