24 65fb98aaeaa52 1
இலங்கைசெய்திகள்

இலங்கை கடற்படையினரால் 31 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

Share

இலங்கை கடற்படையினரால் 31 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 31பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (20.03.2024) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 25 கடற்றொழிலாளர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட ஆறு கடற்றொழிலாளர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை – மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

பின்னர் யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...