tamilni 411 scaled
இலங்கைசெய்திகள்

நடுவானில் ரணிலுடன் செல்பி எடுத்த பிள்ளையான்!!

Share

நடுவானில் ரணிலுடன் செல்பி எடுத்த பிள்ளையான்!!

உலங்குவாணூர்தி பயணத்தின் போது ரணிலும் பிள்ளையானும் நடுவானில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

ஆயிரம் வார்த்தைகளைவிட ஒரு காட்சி அதிகம் பேசும் என்பதற்கு இணங்க, பிள்ளையானும் ரணிலும் காட்சிதருகின்ற இந்தப் புகைப்படம் அதிகம் பேசப்படுகின்றது சமூக ஊடகங்களில்.

இந்தப் புகைப்படம் தொடர்பாக மக்கள் என்ன பேசிக்கொள்கின்றார்கள் என்று பார்ப்பதற்கு முன்பாக இந்தப் புகைப்படத்தில் என்ன தெரிகின்றது என்று பார்ப்பது அவசியம்.

இந்தப் புகைப்படத்தை பிள்ளையான்தான் ‘செல்பி’எடுத்தது போன்று தெரிகின்றது.
புகைப்பம் எடுக்கப்பட்டது ரணிலுக்கு தெரியவில்லை போன்றும் தெரிகின்றது.
இந்தப் புகைப்படம் பிள்ளையானினாலேயே எடுக்கப்பட்டிருந்தால், அதனை பிள்ளையான்தான் வெளியிட்டும் இருக்கவேண்டும்.

பிரபலம் ஒன்றுடன் செல்பி எடுத்து வெளியிடும் ஆர்வக்கோளாற்று பேர்வளி அல்ல பிள்ளையான். பிள்ளையான் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டது உண்மையானால் அதற்கு நிச்சயம் ஒரு அரசியல் காரணம் இருக்கவேண்டும்.
அந்த அரசியல் காரணம் என்ன?

பிள்ளையான் மகிந்த குடும்பத்தின் செல்லப்பிள்ளை என்ற ரீதியிலும், கடந்த தடவை பிள்ளையானை ரணிலே சிறைக்கு அனுப்பியவர் என்கின்ற பின்னணியிலும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி என்ற குற்றச்சாட்டு பிள்ளையான் மீது தற்பொழுதும் இருக்கின்றது என்கின்ற குறிப்போடும், இந்தப் புகைப்படத்தில் ஒரு அரசியலைத் தேடவேண்டி இருக்கின்றது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...