tamilni 342 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் ஜனநாயக ஆட்சிமுறையில் மாற்றம்

Share

இலங்கையின் ஜனநாயக ஆட்சிமுறையில் மாற்றம்

மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் அண்மையில் நடத்திய ஆய்வில், இலங்கையில் ஜனநாயக ஆட்சிமுறை தொடர்பான போக்குகள் மாற்றமடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளன.

இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய கணக்கெடுப்பு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 25 மாவட்டங்களில் 1,350 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வின்படி, ஏறத்தாழ 10 இலங்கையர்களில் ஒருவர் எதேச்சதிகார ஆட்சிக்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார், இது 2018 இல் இருந்ததை விட எதேச்சதிகாரத்துக்கான விருப்பத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.

பெரும்பான்மையான மக்கள் ஜனநாயக ஆட்சியை ஆதரிக்கின்றனர் எனினும் சில சூழ்நிலைகளில், ஜனநாயக ஆட்சியை விட சர்வாதிகார ஆட்சியே அவர்களுக்கு விரும்பத்தக்கதாக அமைந்துள்ள கவலைக்குரிய உணர்வை இந்த கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.

இந்தநிலையில் 2018 இல் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் போது ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன் சர்வாதிகாரத்திற்கு ஆதரவான போக்கு அதிகரித்துள்ளதாக மாற்றுக்கொள்கைளுக்கான மையம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக ஆட்சியின் மீதான அதிருப்தியின் காரணமாகவே எதேச்சதிகார ஆட்சியைத் தழுவுவதற்கான வாய்ப்பை இந்த போக்கு அறிவுறுத்துகிறது.

அத்துடன், நாடாளுமன்ற நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான மக்கள் நம்பிக்கையில் கூர்மையான சரிவை இந்த கணக்கெடுப்பு அம்பலப்படுத்தியுள்ளதாக மாற்றுக்கொள்கைளுக்கான மையம் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...