Mahinda Ranil 2 1 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் கைது

Share

தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் கைது

எல்பிட்டிய – பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தல்கஸ்வல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இருவர் என தெரியவந்துள்ளது.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (16.3.2024) இடம்பெற்றுள்ளதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 11ஆம் திகதி பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவல சந்தி பகுதியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வூ-56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்

குற்றத்தை திட்டமிட்ட சந்தேகநபரும் அதற்கு உதவிய சந்தேக நபருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 03 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...