tamilnaadi 127 scaled
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளில் மாற்றம்

Share

அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளில் மாற்றம்

அதிவேக நெடுஞ்சாலைகளின் உள்ளகப் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் ரக்னா லங்கா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுவரை இந்த கடமையை முன்னெடுத்து வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிலிருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பிற்காக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், அதற்காக மாதாந்தம் சுமார் 12 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகம மற்றும் குருநாகலுக்கு இடையிலான பகுதியின் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை கூறியுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...