9 7 scaled
இலங்கைசெய்திகள்

தொண்டையில் மாத்திரை சிக்கி சிறுமி உயிரிழப்பு

Share

தொண்டையில் மாத்திரை சிக்கி சிறுமி உயிரிழப்பு

மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (12.3.2024) இடம்பெற்றுள்ளது.

ஓஷதி சவிந்தயா ராஜபக்ச என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளது.

இதனால் மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று (11) உயிரிழந்துள்ளார்.  தாய் வெளிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மேலும், சிறுமியின் தந்தை, அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...

e8c8525a 174a 4fae a7ca 29dd06092afe
செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் 95 மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு: உணர்வுபூர்வமாக நடைபெற்ற மதிப்பளிப்பு நிகழ்வு!

மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை ஒன்றிணைத்து அவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு, மன்னார்...

image b63c736522 1
செய்திகள்அரசியல்இலங்கை

விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காததற்கு எதிர்ப்பு: வெங்காய மாலைகளுடன் தம்புள்ளை பிரதேச சபைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்!

தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) அன்று நடைபெற்ற பிரதேச...