tamilnis scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு தெரியாமல் நாடாளுமன்றத்தை கலைக்க திட்டம்

Share

ரணிலுக்கு தெரியாமல் நாடாளுமன்றத்தை கலைக்க திட்டம்

நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட பிரேரணையின் ஊடாக நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு இடையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக்கலந்துரையாடலில் தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பில் இரு கட்சிகளின் சிரேஷ்டர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக தெரியவருகிறது.

அதில் ஆர்வமுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு கணக்கிடுவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இரு கட்சிகளின் சிரேஷ்டர்களின் கலந்துரையாடலில் எழுந்துள்ள விடயங்களை கட்சி தலைவர்களிடம் முன்வைத்து இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரகசிய கலந்துரையாடலுக்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த பசில் ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும், உறுப்பினர்களுக்கு தேவையெனில், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, பொதுத் தேர்தலை நடத்தும் திறன் அவர்களுக்கு உண்டுடென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...